[1:53 AM, 6/28/2015] +91 95516 56551: கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா?
நேற்று முழைத்த காளான் நாத்தீகம் என்று முழங்குகிறது என்று நகைக்காதீர்கள் நண்பர்களே உங்கள் கடவுள் என்ற கருத்து உருவான காலந்தொட்டே அதை நிறுத்து என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. முற்காலத்தில் மன்னர்கள் மதகுருமார் பிடியில் அகப்பட்டதனால் அறிவுக்கருத்துக்களை வெளியிட்டு மனித சிந்தனைக்கு களம் திறந்த அறிஞர்களை அழித்தார்கள். ஆனால் உண்மைகள் நீண்டநாள் உறங்காது என்பதை பகுத்தறிவின் வளர்ச்சியும் பார்ப்பானின் வீழ்ச்சியும் பறைசாற்றுகின்றன. ஆதியிலே மனிதன் ஆடையின்றி இலைகள் குழைகள் அணிந்து, பச்சை இறைச்சி உண்டு,மரங்கள் குகைகளிலே மொழிகள் எதுவும் தெரியாமல் விலங்குகள் போலே தாவித்திரிந்த அவனுக்கு, எல்லாம் வல்லதாய் எங்கும் நிறைந்த இறைவன் இருக்கின்றான் அவனை அடைவதே வாழ்வின் பேரின்பம் என்றும் இறைவனுக்கு மலர் தூவி பால், பழம், பொங்கல் படைத்து கோயில் ஒன்று கட்டி (இந்த ஆகம விதிமுறைகள் எப்பொழுது தோன்றின?) வழிபடவேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே கடவுள் என்ற எண்ணம் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதே திண்ணம். கடவுளின் வருகை காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்த மனிதன் கொடிய விலங்குகளோடு போராடினான், அவற்றைக்கண்டு அஞ்சி நடுங்கினான், சிறிய ஒலிகள் அசைவுகளைக் கண்டு ஒடி ஒழிந்தான், இயற்கையின் கொடுமைகளைக்கண்டு பயந்து நடுங்கினான், இடி மின்னல், காட்டுத்தீ, புயல், மழை போன்றவற்றின் இடைவிடாத தாக்கத்தினால் பெரிதும் அச்சமடைந்தான். இவை யாவும் மனிதனிலும் சக்திவாய்ந்தவர்களால் மறைந்து நின்று செய்யப்படுகிறது என்று எண்ணி அவற்றை வணங்கினான். ஈற்றில் மனிதனது அச்சமே கடவுள் கொள்கையின் மூலப்பொருள் ஆயிற்று. இன்னும் கூட மனிதர்கள் தனக்கு விருப்பமில்லாத செயல்கள் நடந்துவிடும் அல்லது தனது விருப்புக்கள் நிறைவேறாது போய்விடும் என்ற பயம் ஏற்படும் போதுதான் கடவுள் என்று நாடுகிறார்கள். ஆகவே கடவுள் கொள்கையானது அச்சம் காரணமாகவும் அறியாமையினாலும் வளரலாயிற்று. காலம் செல்லச்செல்ல நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் கடவுள்களும் வளர்ச்சியடைந்தன. மனிதன் தன்னுடைய உருவத்திற்கு ஒப்பாக கடவுளைப் படைத்தான். தன்னுடைய கலாச்சாரம் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல் விதிமுறைகளை வரையறை செய்தான். இவ்வாறு தோற்றம் பெற்ற கடவுட்கொள்கையானது மத பூதமாய் வளர்ச்சி பெற்று சமூகரீரியான பாகுபாடுகளை ஏற்படுத்தி மக்களைப்பிளவுபடுத்தி கொலை, கொள்ளை என குற்றச்செயல்களின் உந்து சக்தியாய் விளங்குகிறது. கடவுள் என்பது பொருளற்ற கற்பனை, பொய்யர்களின் புகலிடம், வஞ்சகர்களின் வாய் மந்திரம், அறியாமையின் பிறப்பிடம், அச்சத்தின் அடையாளம், பகுத்தறிவுக்குப் பகை, இன்பத்தின் எதிரி, முன்னேற்றத்தின் தடை மொத்தத்தில் வேண்டாத சொல்!
[1:59 AM, 6/28/2015] +91 95516 56551: தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா?
தரையில் நாம் நடந்து செல்லும் போது ஒரு சிறிய நெருப்புத் துண்டை மிதிக்க நேர்ந்தால் அது வலியினை ஏற்படுத்தி பின் கொப்பளங்களையும் போட்டுவிடும். ஆனால் எமது சைவ ஆலயங்களுக்கு சென்று பார்த்தால் தீ மிதிப்பு என்பது வருடா வருடம் நிகழ்கின்ற ஒரு வைபவமாக காணப்படுகின்றது. இது எவ்வாறு சாத்தியம் என்று வினவுகையில் கடுமையான நோன்பு, மனக்கட்டுப்பாடு, இறையன்பு, என்றெல்லாம் சொல்லுகிறார்கள் பக்தர்கள். ஆலயங்களில் தீ மிதிப்பு மட்டுமல்ல இதுபோன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன; உதாரணமாக தீச்சட்டி ஏந்துதல், நெஞ்சு முதுகு வாய் போன்ற உறுப்புக்களில் அலகு அல்லது ஊசி குற்றிக்கொண்டு காவடி எடுத்தல். நெஞ்சை நெகிழ்த்தும் இவ்வாறான வேண்டுதல்களை உடல்வலிமையோடு நிறைவேற்றக் காரணமாய் இருப்பது இறைவனது அருளா? மருளா? அல்லது அறிவியலா? சைவசித்தாந்தம் கூறும் பல ஆன்மீகவாதிகள் கூட இவ்வாறான சடங்குகளுடன் முறன்படுகையில், இன்னும் எம்மில் பலர் இதுபோன்ற மூட பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டெழ விரும்பாமல் இருக்கின்றார்கள். இந்து மதம் வலியுறுத்தும் அன்புடமையும் அதன் கோட்பாடுகளும் ஒரு பொழுதும் இதுபோன்ற சடங்குகளை (வேண்டுதல்) ஆதரித்ததில்லை என்று கூறும் ஆன்மீக வாதிகளால் இறைவனின் அருள் என்றவாதத்தை முன்வைக்க இயலாமையால் மருள் என்ற பதத்தின் மூலம் சிலர் இதை விழக்க முற்படுகின்றார்கள். மருள் என்பத்ற்கு தன்னை மறந்த நிலையினைக் குறிப்பிடுகின்றார்கள். அதாவது சாம்பிராணிப்புகை, ஆடல், பாடல், உடுக்கை ஒலி ஆகியவற்றால் மனம் தன்னை மறந்த ஒரு நிலையை அடைகிறது. இதனையே சிலர் சாமி வந்து ஆடுது (கலை ஆடுதல்) என்றும் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பினாலேயே ஆத்தா, முருகன், காளி என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறு மருள் நிலையில் இருப்பதனால் இவர்கள் அதிகம் வலியை உணராதவர்களாக காணப்படுகிறார்கள் என்பது சைவசித்தாந்த வாதிகளின் கருத்து. தீ மிதித்தல் காவடி எடுத்தல், அலகு குற்றுதல் போன்றவற்றை யாரும் செய்யலாம் இவை அருளும் அல்ல மருளும் அல்ல எல்லாம் அறிவியலை அடிப்படையாக கொண்டவை என்று நிரூபித்திருக்கிறார்கள் பல பகுத்தறிவாளர்கள். சிந்தனை என்பது மனித குலத்திற்கு மட்டும் உரித்தான சொத்து அதன்மூலமாகத்தான் மனிதனால் மூட நம்பிக்கைகளை அழித்து அறிவியலை வளர்க்கமுடியும். அறிவியல் கண்கொண்டு இத்தகைய வேண்டுதல்களையும் சம்பிரதாயங்களை உற்றுநோக்குங்கள். பக்தர்கள் தம் காலாலே நெருப்பை உழக்குகிறார்கள் ஆனால் தம் உள்ளங்கையால் நெருப்பை ஏந்துவதில்லை மாறாக சட்டி ஒன்றினுள் மண்ணை இட்டு பின்பு நெருப்பினை ஏந்துகிறார்கள் உண்மையாகவே அவர்களுக்கு அருள் அல்லது மருள் இருப்பின் அவர்களுக்கு கையிலே சட்டி எதற்கு? அதற்குள் மண் எதற்கு? நேரடியாக கையாலே நெருப்பை ஏந்தலாமே? தொடர்ந்து நெருப்பை கையிலே வைத்திருக்கும் பொழுது கை சூடாகி தீ காயங்கள் ஏற்பட்டுவிடும். ஆனால் தீ மிதிப்பில் இவ்வாறு நடப்பதில்லை ஏனெனில் கால் எந்த இடத்திலும் தொடர்ந்து நிலைத்து நிற்பதில்லை. விரைவாக இடம் மாறிக்கொண்டே இருப்பதால் காலில் சூடேறாமலும் காயங்கள் ஏற்படாமலும் இருக்கின்றது. சமனான உயத்திற்கு பல ஆணிகள் குற்றப்பட்ட காலணியை அணிந்தும் சிலர் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இங்கே பல ஆணிகள் கூர் மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமனான உயரத்தில் அதிக அளவான மேற்பரப்பை பாதங்களுக்கு வழங்குவதால் இவை காலிலே குத்தமாட்டாது என்பது அறிவியலாகும். இதே தத்துவம் தீ மிதிப்பிற்கும் பொருந்தும் ஏனெனில் தனி ஒரு நெருப்புத்துண்டை பாதங்களில் மிதிக்கும் போது காலில் நெருப்பு கடுமையாக சுடுகிறது. ஆனால் அதிக பரப்பளவில் நெருப்புத்துண்டை பரவவிடும் பொழுது காலானது (பாதங்கள்) எந்த ஒரு நெருப்புத்துண்டையும் ஆழமாக அழுத்துவதில்லை இதனால் காலிற்கும் நெருப்புத்துண்டிற்கும் இடையிலான தொடுகை நலிவாகவே இருக்கும். மேலும் தீ மிதிப்பிற்கு முன்பு விறகுக்கட்டைகள் வெந்து தணலாகமாறும் வரை எரிப்பார்கள் அதன் பின்பு அடித்து நொறுக்கி ஒரே மட்டப்படுத்துவார்கள் (மேடு பள்ளம் இல்லாமல் சமப்படுத்துதல்) இறுதியாக விசிறுவதன் மூலமாக நெருப்பின் மீதுள்ள நீற்றினை (சாம்பலை) அகற்றுவார்கள். ஏனெனில் சாம்பல் இருப்பின் அது காலில் ஒட்டிக்கொண்டு அது காலுக்கு அதிக சூட்டினை வழங்கும் என்பதாலாகும். Source: http://viduthalai.periyar.org.in/20100307/news07.html இப்படியெல்லாம் பேச்சளவிலே சொல்லலாம் ஆனால் இதை செய்துகாட்ட முடியுமா என் நீங்கள் கேட்கமுடியும். ஆம் பெரியார் பகுத்தறிவுப்பாசறையில் இருந்து வந்த தோழர்கள் இவற்றை மக்களுக்கு செய்துகாட்டி மூடப்பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். மற்றும் ஒரு பதிவில் அலகு குற்றுதல் தொடர்பாக விரிவாக எழுதுகிறேன்.
[2:10 AM, 6/28/2015] +91 95516 56551: என்னம்மா யோசிக்கிறாய்ங்க !
மெதடிஸ்ட் ப்ராட்டஸ்டாண்ட் சர்ச்சுக்கு போக மாட்டார்கள்
ப்ராட்டஸ்டாண்ட் மெதடிஸ்ட் (பெந்தகோஷ்) சர்ச்சுக்கு போக மாட்டாங்க
இவர்கள் இருவரும் மாதா கோவிலுக்கு போக மாட்டார்கள்
அப்பறம்,
சியா முஸ்லிம் சன்னி முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
சன்னி முஸ்லிம் சியா முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
இவர்கள் வகாபிகளாக இருந்தால் தர்காவுக்கு போக மாட்டார்கள்
ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் மதத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ( கணக்கு தப்பு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பாலம் கட்டப்பட்டது) ஹிந்து கோவில் எதுக்கு வேண்டுமானாலும் போகலாம். தடையே இல்லை
நன்றாக சிந்தியுங்கள், எது உண்மையான மதம் ? படிக்க ஞாயமான கேள்வி போல் இருந்தாலும், இதிலிருக்கும் இந்துத்துவ விளம்பரம் சகிக்க முடிகிறதா ? அல்லது இவர்கள் சொல்வது உண்மைதானா ?
வடகலை வைணவர், தென்கலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
தென்கலை வைணவர், வடகலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
இவ்விருவைணவரும் சைவர்களின் சிவன் கோவிலுக்கு போகமாட்டார்கள்
இம்மூவகையிலும் உயர்சாதியினராக இருப்பவர் நாட்டார் (கிராம) கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்
நாட்டார் கோவில்களில் வன்னியர், தேவர், கவுண்டர் கட்டிய கோவில்களுக்கு வேறு சாதியினர் போகமுடியாது
கண்ட தேவி கோவில் தேர் இழுப்பதற்கு தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பெரியாருக்கு முன்பு மேலே சுட்டிய எந்த கோவிலுக்குள்ளும் 'இந்து' தலித் நுழைவுக்கு அனுமதி இருந்தது இல்லை. இப்போதும் பரவலாக சாதியின் கீழ் உள்ள கோவில்களுக்கு இவர்களால் செல்லவே முடியாது
1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த புத்த மதம் முற்றிலும் அழிக்கப்பட்டது, பரவலாக இருந்த ஜைன மதமும் மார்வாடிகளிடம் மீட்கப்படாத அடகில் மூழ்கடிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் தற்கால கோவிலுக்குள் தமிழ் பாடும் உரிமைக்கே நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கிவரும் வேலையிலும், ஆறுமுக சாமி போன்ற முதியவர் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவேன் என்று முனைந்ததற்கு ரவுடிகளின் துணையுடன் மற்றும் ரவிடியாக மாறி தாக்கப்பட்டதெல்லாம் வசதியாக மறைக்கப்பட்டு இந்து மதம் ஒன்றாம், கோவில் என்பதில் எவரும் செல்ல எந்த தடையுமின்றி சென்று வருகிறார்களாம் ?
******
எல்லா மதக் குப்பைகளும் ஒன்று தான், இதில் எம்மதத்துக் குப்பையில் துர்நாற்றம் மிகுதியாக அல்லது மற்றவற்றைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் புனித குப்பை என்று சொல்வது போன்றதே.
[2:19 AM, 6/28/2015] +91 95516 56551: சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?
[
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:
புரதச்சத்து
சுண்ணாம்புச் சத்து
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
சோடியம்
இரும்புச் சத்து
விட்டமின் ஏ
தையாமின்
ரிபோபிளேவின்
நிக்கோடினிக் அமிலம்
ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயாளிகளுக்கு எதற்காக நல்லது?
சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 110 மி.லி வரை இருக்கலாம்.
நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும்.
அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.
அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது.
தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு.
[2:22 AM, 6/28/2015] +91 95516 56551: இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள்
[
சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே ஏராளம்.
வாரத்தில் இருமுறை மாமிசம் சாப்பிட்டால் பரவாயில்லை, வாரத்தில் அனைத்து நாட்களிலும் சாப்பிடுபவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது கொஞ்சம் கடினமான விடயம்.
ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை வைத்து நமது ஆரோக்கியம் மேம்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் தவிர்க்க அறிவுறுத்தும் முதல் உணவுகளில் இடம்பெறுவது சிக்கன், மட்டன், மாட்டிறைச்சிகள் தான்.
அவ்வாறு இறைச்சியை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்துவதன் மூலம் உங்கள் உடலில் புதுவித மாற்றங்களை காணலாம்.
1.இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது முதலில் ஏற்படும் மாற்றம் உங்கள் எடை குறைவதுதான். குறைந்தது 3 அல்லது 4 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது.
2. சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடுபவர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
3. தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் அவசியம், எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது, ஆகவே புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. இறைச்சி சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் இந்த உணவை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் சூடு குறையும்.
5. செரிமானப்பிரச்சனைகள் சரியாகும்.
6.இறைச்சியை கைவிட்டால் அதற்கேற்றவாறு சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
[2:28 AM, 6/28/2015] +91 95516 56551: இராமயணம் நடந்த கதையா ?
வடமொழி வேதங்களான நான்கு வேதங்களில் பெரிதாக பேசப்படாத கிருஷ்ணன், மத்வாச்சாரியார் மற்றும் இராமானுஜருக்குப் பிறகே வைணவம் என்னும் விஷ்ணுவை / கிருஷ்ணனை வழிபடும் பிரிவு ஒன்று இருப்பது தெரியவந்தாக இதுவரை தெரிந்த பக்தி இலக்கியம் மற்றும் சமய நூல்களில் இருந்து அறிய கிடைப்பவை. வேதகாலத்திற்கும் பகவத் கீதைக்கும் தொடர்பு இல்லை என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையில் வேதம் பற்றி குறிப்பு இருக்கிறது. வேதங்களில் பகவத் கீதையோ, கிருஷ்ணனோ இல்லை. மேலும் கிருஷ்ணன் ஆரிய கடவுள் இல்லை என்பதற்கு சான்றாக கிருஷ்ணன ஆயர் குலம் சார்ந்த கடவுள் என்கிறார்கள். கிருஷ்ணனின் வண்ணமும், இராமனின் வண்ணமும் கூட கருப்புதான் என்பது அந்த உருவ ஓவியங்களைப் பார்த்தாலே தெரியும்.
சிறப்புற்ற பலவழிபாடுகள் வைதீக மயமாக்கப்பட்ட போது கிருஷ்ணனும் வைதீக மயமாக்கப்பட்டு இருக்க வேண்டும். வேதக்கடவுளாக காட்ட மகாபாரதம் மற்றும் பகவத் கீதையுடன் தொடர்பு படுத்தி இருக்க வேண்டும். கீதையின் முழுப்பகுதியும் கிபி 1500 க்கு பிறகே இறுதி வடிவம் பெற்றதாக அண்மையில் ஒரு நூலில் படித்தேன்.
எனது பார்வையில் இராமயணம் என்பது வைணவ / சைவ மதங்களின் ஒற்றுமைக்காக ஏற்பட்டது என்பது முதன்மையான காரணம். இராமயணத்தில் இலங்கே'ஸ்வரன்' சிவ பக்தனாகவும், இராமரே இராமேஷ்வரத்தில் சிவ பூஜை செய்தவராகவும் காட்டப்பட்டு இருக்கிறது.
கிருஷ்ண அவதாரம் என்று சொல்லப்படும் தசவதாரத்தில் இராமனும் ஒன்று. மற்ற அவதாரங்கள் நடந்ததற்கான சான்றுகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. அவற்றிற்கான புராணங்கள் மட்டுமே இருக்கிறது. பூமி தட்டையானது என்ற கருத்து கொண்டிருந்த போது அவதாரக்கதைகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். மூன்று அடி நிலம் கேட்டு மாபலி சக்ரவர்த்தியிடம் கிருஷ்ணன் நிலத்தை ஒருகாலாலும், வானத்தை ( இல்லாத ஒன்றை எப்படி?)ஒருகாலாலும் 'அளந்ததாகாவும்' மீதம் ஒரு அடி வைக்க இடம் இல்லாது போனதால் மாபலி சக்ரவர்த்தி தலையில் காலை வைத்து மண்ணுக்குள் அமிழ்த்தியதாகவும் அவதாரக் கதை வாமன அவதாரத்தில் செப்புகிறது. உருண்டையான பூமியை ஒரு தட்டையான பாதத்தால் எப்படி அளக்க முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் புராணங்கள் உருவான போது பூமி தட்டையானது என்றும் வானம் கூரையாக இருந்தது என்ற கருத்து இருந்திருக்கலாம் என்று கொள்ள முடிகிறது. கூர்ம அவதாரம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்.
இதுபோன்றே பல அவதாரக் கதைகளும் சுவைபட எழுதி இருந்தாலும் நடப்புக்கு ஒவ்வாதவையாகவே இருக்கிறது. எனவே 8 அவாதாரக்கதைகளைப் போல் தான் இராம அவதாரக் கதையும் அதில் ஒன்று என்று கருத முடிகிறது. தெய்வங்கள் இருக்கிறது என்று நம்புவருக்கு இராமார் வாழ்ந்தார் என்று நம்புவது ஒன்றும் கடினமானது அல்ல. ஆனால் அவதாரங்கள் அனைத்தும் 'லோக ஷேமத்திற்கு' என்று அவற்றிற்கான காரணமாக அதை நம்புவர்கள் சொல்லும் போது, கோவில்களை இடம் மாற்றி வைப்பதாலேயோ, அல்லது பாபர் மசூதி போன்றும், புத்த விஹாரங்களை இடித்தது போன்றும் நம்பிக்கை சார்ந்த இடங்களை இடித்தது பாவச் செயல் அல்ல என்று ஆதிக்கம் நிலைநிறுத்திக் கொண்டதையும் நினைத்தால், மணல் திட்டு என்று அரியப்பட்டத்தை இராமர் பாலம் என்று நம்பினாலும் மக்கள் நலனுக்காக அதனுடன் சுற்றுசூழலின் பாதூகாப்பையும் கவனத்தைக் கொண்டு பொருளாதார மேம்பாட்டுக்கு தேவை என்னும் போது அகற்றிவிட்டால் பெரிதாக கெடுதல் ஒன்றும் வரப் போவதில்லை.
ஆப்கானில் புத்தர் சிலைகளின் தலை பீரங்கிகளுக்கு வீழ்ந்த போது இந்தியாவில் பிறந்தவர் புத்தர் என்பதற்காக இந்தியாவுக்கு கெடுதல் எதுவும் வரவில்லை. அது மதவெறியால் உடைக்கப்பட்டது. ஆனால் இங்கு நாம் ஆக்கபூர்வத்திற்காக ஒரு மணல் திட்டை அகற்றுகிறோம். வைரவேல் திருடு போனபோது திருடர்களை சூரசம்ஹாரம் செய்யாத முருகன், பஞ்சலோக சிலைகள் களவு போனபோது கவலைப்படாத மற்ற தெய்வங்கள், மரகத லிங்கங்கள் கடத்தப்பட்ட போது ருத்தர தாண்டவம் ஆடாத சிவனையும், பரம்பரைகளாக கோவில் சொத்துக்களை தின்றொழிக்கும் கும்பல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றன.
கருணாநிதி இந்துக்களை இழிவு படுத்துவிட்டார் ? யார் யார் இந்துக்கள் ? நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்துக்கள் இல்லையா ? அவர்கள் தங்கள் குல சாமிகள் ஆடு கோழி கேட்கும் என்று அதை பலி இடுவது நம்பிக்கையில்லையா ? அவர்களின் நம்பிக்கைகளையும், விழாக்களையும் ஒரே ஒரு சட்டத்தில் பாழ்படுத்தி, அவர்களை, அவர்களே கட்டிக் கொண்ட சாமிகளுக்கு முன்னால் வெட்ட முடியாமல்போன ஆடுகளை சுடுகாட்டில் வெட்ட வைத்து அவர்களை மசான (மயான) புத்திரன்களாக ஆக்கியது மட்டும் இழிவு இல்லையா ? இதையெல்லம் செய்வதவர் கருணாநிதி என்னும் நாத்திகரா ? நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர் இந்துக்கள் இல்லையன்றும், அவர்கள் இந்து தெய்வங்கள் இல்லை என்றும் சொல்ல முடிந்தால் இறை நம்பிக்கை இழிவு படுத்துப்படுவதைப் பற்றிய கூற 'யோக்கிதை' இருக்கிறது கொள்ளலாம். நாட்டார் தெய்வங்கள் சர்கரை பொங்கல் மட்டுமே சாப்பிடும், ஆடுகோழி கேட்காது என்று அந்த சாமிகளே வந்து சொல்லியதா ? கூட்டம் கூட்டி இந்திய இந்துக்களின் ஜனத்தொகைக்கு மட்டும் அவர்களது எண்ணிக்கை வேண்டும், அவர்களது குலதெய்வமும், நம்பிக்கை ஏற்புடையதல்ல என்பது ஆதிக்கம் செலுத்துவது இழிவு படுத்துவது அன்றி வேறு என்ன ?
நம்பிக்கை என்றால் அவரவருக்கு இருப்பது எல்லாமே நம்பிக்கை தான் ஒருவர் மொட்டை அடித்துக் கொள்வார், தரையில் உருளுவார், அலகு காவடிகள் கூட எடுப்பார், இதையெல்லாம் பைத்தியகாரத்தனம் என்று சொன்னால் கருணாநிதி இதிகாச இராமனைப் பற்றி கேள்வி எழுப்பியதில் என்ன தவறு இருக்கிறது ? கருணாநிதி வெறும் வாய்வார்த்தை தானே சொன்னார், பிஜேபி, இந்துபரிவார அமைப்புகளின் ஆதரவுடன் ஜெயலலிதா நாட்டார் தெய்வங்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் பேரிலேயே சட்டம் இயற்றி , காவலர்கள் துணையுடன் ஆடுகோழி பலி இடுபவர்களை ஓட ஓட விரட்டி இழிவு படுத்தினாரே, அது இந்துமதத்தின் மீதான இழிவு இல்லையா ? கருணாநிதியின் முயற்சியினால் தான் ஓடாத திருவாரூர் தேர் ஓடியதாக சொல்கிறார்கள். கோவில்களை தேவதாசிகள் என பெண்களை 'வைத்திருந்து' கோவிலையும் தெய்வத்தையும் பெண்களையும் இழிவு படுத்தியதெல்லாம் கருணாநிதி போன்ற நாத்திகர்களே துடைத்தொழித்தனர்.
ஒரு மக்கள் நல திட்டத்தை நம்பிக்கை என்ற பெயரால் கெடுக்கும் போது, அந்த நம்பிக்கையை குறித்து கேள்வி எழுப்புவது மட்டும் என்ன தவறோ ?2:51
[9:05 AM, 6/28/2015] +91 95516 56551: காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் ! நாமே திடீர் நகருக்கு நேரில் சென்று படம் குறித்த படைப்பாளிகள், மற்றும் ரசிகர்களின் கருத்தை சொல்லி அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்வோம் என முடிவு செய்தோம்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள்
சென்னை-அண்ணாசாலையை ஒட்டிய சைதாப்பேட்டை மறைமறையடிகள் பாலம் அருகே கீழே உள்ள திடீர் நகர், கோதாமேடு-அண்ணாநகர் பகுதிகளுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்றோம்.
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள். மூன்றடி இடைவெளிச்சந்தில் இருபுறமும் தகரக் கொட்டகைகள்.
சிரிப்பு, கும்மாளம், அவலம், வெறுமை, சுறுசுறுப்பு, சோம்பிக்கிடத்தல் என விதவிதமான உணர்ச்சிகளுடன் தென்பட்ட சிறுவர் பெரியவர் அனைவரையும் சந்தித்தோம்.
“காக்கா முட்டை படம் சூட்டிங் நடந்த இடம் இதுதானே”
“ஆமாம்” என்று சிரித்தனர்.
“காக்காமுட்டை படம் பார்த்தீர்களா”
“டிவியிலே பார்த்தோம் பாட்டு, ட்ரெயிலர் எல்லாம்..” என்றனர். சிலர் டி.வி.டியிலும் ஓரிருவர் தியேட்டரிலும் பார்த்தாக சொன்னார்கள். பெரும்பான்மையினர் பார்க்கவில்லை. சொல்லப்போனால் அப்படம் திரையரங்குகளில் வந்ததே தெரியாது.
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…“, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..” என்று காக்கா முட்டையில் கவிஞர் நா. முத்துக்குமார் உருவாக்கியிருக்கும் அற்புதமான மகிழ்ச்சி, சந்தோஷம், ஜாலி, நிம்மதி குறித்து மக்களிடம் கேட்டோம்.
அருகில் வந்த ஒருவர் “அவனுங்க, காக்காமுட்டை, பல்லிமுட்டைனு படம் காம்ச்சி, அவார்டு வாங்கி மேலேமேலே பூடுவனுங்கோ….நாங்க மட்டும் கூமுட்டையா கூவத்துலேயே இருக்கணும்னு படம் காட்டாறனுங்களா? இங்க எங்களுக்கு இன்னா… நிம்மதிய கண்டானுங்க… அவசரம்னா…. போறத்துக்கு வீட்டுல ஒரு கக்கூஸ் இருக்குதானு பாத்தானுங்களா? பொம்பளைங்க, குழந்தையுங்க, வயித்துவலி பேதி வந்தா, ரோடு வரைக்கும் ஓடணும். அங்கேயும் போனா…க்கியூதான்…அது வரைக்கும் …நீ நில்லுன்னா… அது…நிக்குமா? பெருசுங்கக்கூட காலோடோ…போ…ய்யி..டும். அந்த அசிங்கம் அவனுங்களுக்கு தெரியுமா? …
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…”, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..”
இங்க..2000 பேருக்கு மேல்..கிறோம்…2..கக்கூஸ்தான் (பொதுக் கழிப்பறை – ஆணுக்கு 2, பெண்ணுக்கு 2)…அதுலயும் அங்க தண்ணீ…இல்ல.. டப்பாவுல எடுத்துகினு போனோதான் கழுவ முடியும்…!…இன்னும் ஆயிரம் கப்பு (நாற்றம்)… இருக்குது இங்கே.. ..அதலதான் ..நாங்க வாழ்றோம். இந்த.. வாழ்க்கை அவனுங்களுக்கு சந்தோசமா.. தெரியுதா?” என்று எரிச்சலாகி முறைத்தார்.
அடுத்ததாக கூவம் கரைக்கு அதாவது காக்கா முட்டையின் படி “தாயின் மடி” கரைக்கு நம்மை அழைத்துச் சென்றனர், பகுதி சிறுவர்கள். “பச்சை பசுங்காடு” என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் “பச்சை பீக் காடு” கண்டு பீதியில் உறைந்தோம்! அதன் நடுவே, சிறுவர்கள் ஒரு கற்பாறையில் கிரிக்கெட் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தனர். அனுபவம் இல்லாததால், கவனமாக சென்றும் பீயில் விழுந்து எழுந்த பிறகுதான் வினவு செய்தியாளர் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது!
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”
“சார்.. இங்க எதுக்கு வர்றீங்க …?” என்றனர், அருகில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.
“இங்கு எப்படி விளையாடுவீர்கள்? பந்து ஆய் மீது விழுந்தால் என்ன செய்வீர்கள்”
‘அதெல்லாம் ஒரு மேட்ரா…’ என்பது போல் நம்மைப் பார்த்தார்கள்!
“டொக் (மெதுவாக அடிப்பது அல்லது கட்டை போடுவது) அடிச்சிதான் இங்க விளையாடணும். தூக்கி அடிக்கிறவன தொறத்திடுவோம்” என்றனர். ஆக இங்கே சிக்சரோ இல்லை ஃபோருக்கோ வழியில்லை. கிரிக்கெட்டிலே கூட திடீர் நகர சிறுவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது என்ற போது அங்காடித் தெரு இயக்குநரின் அறிவு குறித்து நாம் கரிசல் மண் சென்றுதான் அழ வேண்டும்.
அரசுக்கு சொந்தமான டோபி கானா (வண்ணார் துறை – சலவைத் தொழிலாளர் பகுதி) நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சுதாகர் என்ற மாணவரிடம்…
“ஆமா நீ ஏன் செருப்பு போட மாட்டேங்குற?
“அத போட்டா வழுக்குதுண்ணே?”
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல”
“நடந்தாலே வழுக்குதா?”
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”
“சரி வீட்டுல டாய்லெட் இல்லயா?”
“வீட்டுல குளிக்க மட்டுந்தா முடியும்”
“நைட்ல டாய்லெட் வந்துச்சுன்னா என்ன பண்ணுவ?
“கரைக்கி(கூவம்) போயிட்டு இங்க வந்து கழிவிக்குவேன்”.
திடீர்நகர சிறுவர்கள் செருப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது பற்றி காக்காமுட்டை படம் உருவாக்கிய குறியீடு, படிமம், கவித்துவம் குறித்து கதையளந்த அந்த நல்லவர்கள் எங்கே?
வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மு என்பவர், “சொன்னா.. அசிங்கம்..சார்…எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…” என்று மீண்டும்… கோபத்தோடு ஏதோ.. சொல்ல வந்தவரை அருகிலிருந்த பிற பெண்கள் இழுத்து வாயடைத்தனர்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?”
அத்தெருவில் சாப்பாட்டுக்கடை நடத்தும் கற்பகம் என்பவர், “இந்த சினிமாக்காரனுங்க எங்களப்பத்தி இப்படி காமிகிறதுக்கு புதுசு இல்ல! ஆனா இந்த சாக்கடையிலக் கூட எங்கள வாழவுடாம பலபேரு, இந்த எடத்த எப்படி புடிங்கிறதுனு குறியா கீறானுங்க. சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல” என்றார், குரல் உடைந்து.
பக்கத்திலிருந்த கமலக்கண்ணன் என்பவரிடம், “உங்களை கொசுக்கள் கடித்தாலும் காக்கா முட்டையில் வரும் பாடல் போல ‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?” என்று கேட்டோம்.
“….சார்…நல்லா வாய்ல்ல வருது சார்…பேமானிங்க, சினிமாக்காரனுங்கள இங்க ஒரேஒரு நாளைக்கு வந்து படுக்க சொல்லுங்க சார்…! 3 அடிஅகலம் உள்ள சாக்கடைதான் எங்களுக்கு தெருவு! அதுமேல சிமெண்டு ஸ்லாப் போட்டு நடக்கிறோம், சாப்புடுறோம். தூங்றோம். இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!” என்றார்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…”
பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த சொளமியா என்பவர். “கொசுக்கடி மட்டுமில்ல, குடிக்க தண்ணீ, குழாயில ராத்திரி 12 மணிக்கு மேலதான் வரும்! பாதி ராத்திரி 1 மணி, 2மணிக்கு குடிக்கிற தண்ணிய புடிச்சுட்டு, அப்பிடியே குளிச்சிருவோம். அந்நேரத்திலதான் யார் பாப்பாங்களோன்ற பயம் இல்லாம குளிக்க முடியும்! பிறகுதான் தூங்கப் போவோம்.
எல்லார் தலைமாட்டிலும் ஒரு கொசு வத்திய கொளுத்தனாதான் தூங்க முடியும். அதனால பகல்லானா… குழந்தைங்க விடாம இருமுதுங்க… டாக்டர் கிட்டப்போனா கொசுவத்தி வைக்கக் கூடாதுனு சொல்றாரு.. .எங்க வேதனைய… யார்..கேக்றாங்க..” என்றார்.
திடீர்நகர் வீடுகளில் கழிப்பறை இல்லை. குளிக்கவே முடியாது. ஏனெனில் வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் பெண்கள் நள்ளிரவில் ஊர் அடங்கியதும் தெருக்கோடிகளில் சென்று குளிக்கிறார்கள். குளியல் என்றால் ஏற்படும் ஒரு ரம்மியம், மணம், மல்லிகை, ஸ்கந்தம், பாத்ரூம் பாடகர்கள் போன்ற குறியீடுகளில் வாழ்பவர்கள் தங்களது தெருக்களில் நள்ளிரவில் குளித்தால் காக்கா முட்டை குறித்த படிமங்கள் டமாலென உடைந்து விடும், கவனம்!
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“லின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”
திடீர் நகர் சிறுவர்களின் ஆர்வம், கனவு, பணப் புழக்கம், நவீன நுகர் பொருட்கள் பற்றிய அறிவு என்ன?
நாங்கள் சென்ற நேரம் கோலிக்குண்டு சீசன். கோதாமேடு, அதை ஒட்டியுள்ள ஹவுசிங் போர்டு தான் இவர்களின் ஆடுகளம். காலை 7 மணிக்கு ஆட ஆரம்பித்த சிறுவர்கள் 1 மணி வரையில் பல்வேறு கூட்டமாகப் பிரிந்து பிரிந்து விளையாடினர்.
மாத்திரை (விஷ்ணு) வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு வந்து மீண்டும் கெத்தா விளையாட ஆரம்பித்தான். அப்போது அவனுடைய நண்பன் சொரி(சந்தோஷ்) “டேய் இவன யாரும் சேத்துக்க வேணாண்டா! இவனுக்க சாப்ட கொடுத்த துட்ட வெச்சி கோலிக்குண்டு வாங்கியாந்துட்டான்” செல்வம் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்தார்.
சஞ்சீவ், முட்டை பஜ்ஜி (ரகுமான்), கலீல், ஷாஜஹான், கவுதம், கமலேஷ் என எல்லாரும் கோலிக்குண்டு விளையாடி ஜெயிப்பதில் மூழ்கியிருந்தனர். இவர்கள் ஒரே அணியாக மட்டுமே விளையாடவில்லை. சிறிது நேரம் ஒரு குழு, பிறகு வேறு ஒரு கூட்டம் என மாறி மாறிக்கொண்டே இருந்தனர்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா
ஒரு குண்டு ஒரு ரூபாய் என ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 ரூபாய் மதிக்கத்தக்க குண்டுகள் இருந்தன. புதிதாக ஒரு கிரவுண்ட் இருந்தாலும் அங்கே வாலிபர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொள்வதாலும், வெயிலாக இருப்பதாலும், வெறும் மணலாக மட்டுமே இருப்பதாலும் சிறுவர்கள் வீட்டிற்கு அருகிலேயே விளையாடுகின்றனர்.
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா, 15 ரூபாய் சம்பாதிக்க திண்டாடுவார்களா என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம்.
சுதாகரிடம்…
“ரயில்வே ட்ராக் பக்கமெல்லாம் போவீங்களா?
”இல்லண்ணே அங்க போனா பெரியவங்க தொரத்திருவாங்க”…
காக்கா முட்டை காட்டிய படங்கள்
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“பள்ளிக்கூடத்துல தெனமும் தீனி எதாவது வாங்கி சாப்புடுவியா?”
“சிப்ஸ், குர்குரே, பிங்கோ எல்லாம் சாப்புடுவேன்”
“சரி யாரு ஒனக்கு இவ்ளோ காசு கொடுப்பா?”
“எங்கம்மா தான் கொடுப்பாங்க, தெனமும் 5 ரூவா இல்ல 10 ரூவா கொடுப்பாங்க,
டீச்சர் கல்லூரியில் உள்ள அரசு மாடல் மேல்நிலைப்பள்ளியில் 11-வது படிக்கும் செல்வத்திடம்..
“என்னடா தம்பி கோலிக்குண்டு வெளையாடலியா?”
“இல்லண்ணா நாங்கெல்லாம் WWF-தான் பாப்போம்”
“அப்படியா யாரப் புடிக்கும்?”
“இப்பக்கி ஜான் சினா தான்”
“சரி வேற யாரையெல்லாம் தெரியும்?”
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன்.”
“காலின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”
“ஏண்டா தம்பி பத்தாவது படிச்சவுடனே டிப்ளமோ படிக்க போயிருக்கலாம்ல?”
“இல்லண்ணா, ஸ்கூல்ல படிச்சா ஃபிரண்ட்ஸ்களோட ஜாலியா பேசிக்கினு வெளையாடிக்கினு இருக்கலாம், காலேஜ்-னா செரமம் அதான் +1 சேந்துட்டேன்”
“ஒனக்கு நெறையா காசு கெடச்சா என்னடா தம்பி சாப்டுவ?”
“நெறையா காசு இருந்தா பீஃப் ரைஸ் தான்னே சாப்பிடுவேன்”
“பீசாவெல்லாம் சாப்பிடுவியா?”
“எங்கப்பாகிட்ட சொன்னா, ஆட்டோ ஓட்டி முடிச்சிட்டு வர்றப்ப வாங்கிக்கினு வருவாரு, பேக்கரில கூட 30 ரூவாக்கி கெடைக்குது. மெக்டொனால்ட்ஸ்-ல கூட 90 ருப்பீஸ்-கு போட்ருக்காங்கன்னா”
மற்றும் இங்கிருக்கும் பல சிறுவர்களுக்கு வாட்ஸ் அப் உட்பட அனைத்தும் பரிச்சயம். செல்பேசி இல்லாத சிறுவர்கள் கூட தங்களுக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு இருப்பதை சொல்லி பெயர் கொடுத்தார்கள்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு”
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சுதாகரிடம்…
“தினமும் பள்ளிக்கூடத்துக்கு போறப்ப குளிப்பியா?
“குளிப்பேன்”,
“எங்கடா தம்பி குளிப்ப?“
“வீட்ல தான் குளிப்பேன்!”
“கூவத்துல குளிக்க மாட்டியா?”
“சின்னப்புள்ளயா இருக்கப்ப தான் குளிச்சிருக்கேன், அப்பல்லாம் தண்ணி நல்லா இருக்கும், இப்பல்லாம் வீட்ல மட்டும் தான் குளிக்கிறோம்”
செல்வத்திடம்…
“ஒனக்கு ரொம்ப நாளா எதாவது ஆசையிருக்குதா?”
“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல, லீவு நாள்ல வாட்டர் கேன் சப்ளை பண்ணுவேன், கெடைக்கிற வச்சு சட்டையெல்லாம் எடுத்துக்குவேன், மீதி இருந்தா அம்மா கிட்ட கொடுத்துருவேன்”
“சரி தினமும் கூவத்துல குளிக்கிறியா?”
“என்னாண்ணா? அங்க குளிக்கிற மாதிரியா இருக்கு? ஒரே சேறா இருக்கு, நான் சின்ன புள்ளயா இருந்தப்ப குளிச்சிருக்கேன், அப்பொல்லாம் தண்ணி க்ளியரா இருக்கும், இப்பல்லாம் சாக்கடை தண்ணியா தொறந்து வுடுறாங்க, ஏ.பி.டி-லேர்ந்து தெனமும் அவ்ளோ சாக்கட தண்ணியா கொட்டுறாய்ங்க”
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!”
“அப்ப ஆத்துகெல்லாம் எப்ப தான் போவீங்க?”
“காலைல கால் கழுவ மட்டும் தான்னா போவோம், அதுவும் வூட்ல கக்கூஸ் இருந்தா இன்னாத்துக்கு போறோம்.”
“சார்… இங்க.. வாங்க” என்றார் கமலக்கண்ணன், “பல நாள் சூட்டிங் எடுத்து எங்க பொழப்ப கெடுத்தாங்க சார்… எங்க வீட்டிலேயே எங்கள நிம்மதியா இருக்க விடாம…. அடிக்கடி வெளிய வராதீங்க.. வீட்டுல டிவி சவுண்டு கொஞ்சம் கொறைங்க… அப்படினு அவனுங்க சொல்லறது எல்லாம் கேட்டோம். இப்ப அந்த சினிமாவிலயே எங்களையே நக்கல் பன்றானுங்களா” என்றார் எரிச்சலாக.
ஆறுமுகம் என்பவர் “கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு… அவங்க குழந்தைக்குட்டிங்க இப்ப அநாதையா இருக்குது சார்” என்றார் விரக்தியுடன். கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் பல இணைய பிரபலங்கள் இந்த வரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
எங்கள் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த விக்னேஷ் என்ற இளைஞர், “அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன். சினிமாக்காரனுங்க எல்லாம் ஜோட்டா (பிராடு) வேலை பண்றவங்க” என்றார்.
அங்கு கும்பலாக இருந்த பெண்களிடம் பேசினோம், “மழைக்காலம் வந்தா இங்க எப்படி? குழந்தைகளோடு நீங்களும் சந்தோசத்தில் மிதப்பீங்களாமே?
“….அப்படியா….மழைவந்தா நீங்க இங்க வாங்க. எங்கக்கூட சேர்ந்து வெள்ளாடுவிங்க….” என்று சிரித்தனர்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும்”
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும். காய்ச்சல், பேதி, நாத்தம், வேலையில்ல, சோறு இல்லனு…. செத்து பொழைப்போம்… இருந்தாலும் மழை வேணுமில்லனு… மனசு சொல்லும். குழந்தைகளை தேத்திகினு.. இருப்போம்” என்று வலியோடு பேசினர்.
மழையை ரசித்து சிறுவர்கள் ஆட்டம் போடுவதாக காக்கா முட்டை படத்தில் காட்டப்பட்டது பற்றி செல்வம் என்ற சிறுவனிடம்
“மழையெல்லாம் வந்தா என்னடா தம்பி செய்வீங்க”
“அண்ணா, மழை பெஞ்சுச்சுனா வீட்டுல ஒழுவுற எடத்துலெல்லாம் பானைய வெக்கணும், அப்புறமா ரெண்டு மூனு நாளு கழிச்சி கொசு கடி தாங்காது, வெள்ளம் கூடுனா உடனே பள்ளிக்கூடத்தண்ட போயிருவோம். தண்ணி வடிஞ்சப்புறம் வருவோம்”
நாம் பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் பலர் சூழ்ந்து கொண்டனர். காக்காமுட்டை படத்தில் வரும் டாஸ்மாக் கடைக்காக தன்னுடைய டீக்கடையை தற்காலிகமாகக் கொடுத்தவர், கொதிப்புடன், “சூட்டிங் எடுத்துட்டு அப்பால, பேசுனது மாதிரி பணம் கொடுக்காம ஓடுன திருட்டுபசங்க சார் அவனுங்க… இந்தப்படம் தியேட்டருக்கு இல்ல… சின்ன பட்ஜெட்டு.. நீங்களெல்லாம் உதவி பண்ணனும்னு…. பொய் சொன்னாங்க அவனுங்க. பிச்சைக்கார பசங்க! இப்ப அவனுங்கள வரச்சொல்லுங்க. 100 பொம்பளங்கள கூப்பிட்டு தொடப்பக்கட்டையாலேயே அடிப்போம்! அவனுங்க போலீசு ஸ்டேசன் இல்ல எங்கவேனாலும் போய் ரிப்போட் பண்ணட்டும். டூபாக்கூர் பசங்க… ” என்றார்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள்.
இப்படி பலபேர், காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள். “துணி காயப்போடும் சீனுக்காக, பலமுறை பசங்களை ஓட்டுமேல ஏத்தினாங்க, எங்க வீட்டு சிமெண்ட் ஓடெல்லாம் போச்சி. அத ரிப்பேரு பண்ண பணம் தரேனு, கடைசியிலே ஏமாத்திட்டு போய்ட்டாங்க…” என்றார் ஒருவர்.
மேலும் சூட்டிங்க்குகாக தன்னுடைய காயலாங் கடையைக் கொடுத்தவர், தடுப்பு கட்டி பாத்ரூம் தந்தவர், அதில் நடித்த அப்பகுதி லட்சுமி பாட்டி… இப்படி பலர் காக்காமுட்டை சினிமா கும்பல் தருவதாக சொன்ன சில நூறு ரூபாய்களைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடிய கதையை சொன்னார்கள். ஆனல் காக்காய் முட்டை உலகமெங்கும் வசூலித்த தொகை பதினைந்து கோடி என்கிறார்கள்.
இப்படிப்பட்ட சினிமா படைப்பாளிகள்தான் காக்கமுட்டைத் திரைப்படத்தில் வரும் திடீர் நகர் மக்கள், தமது பகுதி சிறுவர்களை அடித்த பீட்சா முதலாளியை எதிர்த்து போராடுவதற்கு பணம் எதிர்பார்த்தார்கள் என்று காட்டுகிறார்கள். தங்கள் சொந்தப் பிரச்சினைக்குக்கூட, பேரணி, போராட்டம் என்று அவர்கள் தெருவுக்கு வருவது சாராயம், பிரியாணி, பணத்திற்குதான் என்று பார்வையாளர்களுக்கு குறிப்பால் புரிய வைத்து உலக சினிமா, ஈரானிய சினிமா என்று ஏங்க வைத்தார்கள்.
திடீர் நகர் மக்களிடம் இதைப்பற்றிக் கேட்டதும்,
காக்கா முட்டை காட்டிய படங்கள்
அவன்ங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?
“எங்க பசங்கள எந்த கஸ்மாலமோ அடிச்சதுக்கு, ஞாயம் கேக்க நாங்க காசு கேட்டோமுனு எந்த பாடு சொன்னான்? அவன இங்க இத்துணு வா, கீறி டிக்கிய பொளந்து பீசாக்குறேன். ஏன் சார், எங்க பசங்கள காப்பாத்தக்கூட நாங்க துட்டு கேப்பமா? இதெல்லாம் நிஜமென்னு நம்பிக்கினு உன்ன மாறி பட்ச்சவங்க வந்து கேப்பீங்களா? இதுவே அந்த சினிமா பாடு வந்து சொன்னான்னா கதை வேற! இதுக்கு மேல கேக்காதா, வாயில வந்துற போது”
“சினிமாக்காரனுங்கன்னா எங்கள எது ஒன்னாலும் சொல்வான்களா? அவனங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?…. கண்டத சினிமான்னு காம்ச்சி எங்கள பணம் புடுங்குவோம்னு காட்டுவானுங்களா”, என்று கொதித்தனர்.
இனி என்ன? இந்த வினவு கட்டுரை பிரபலமாகி, காக்கா முட்டை படப்பிடிப்புக்குழு, தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறன், பெரிய தயாரிப்பாளர் முர்டோச் (ஃபாக்ஸ் ஸ்டூடியோ), 60 மார்க் ஆனந்த விகடன் அனைவரும் திடீர் நகர் சென்று இஸ்திரி பெட்டி, மூன்று சக்கர சைக்கிள்,
வேட்டி சட்டை, சேலை கொடுக்கும் விழாவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அப்படி ஏதும் திட்டம் அறிவிக்கப்பட்டால் காக்கா முட்டையின் கவித்துவத்தை அம்மக்களுக்கு காட்சிப்படுத்துவோம். மீதியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
– வினவு செய்தியாளர்கள்
நேற்று முழைத்த காளான் நாத்தீகம் என்று முழங்குகிறது என்று நகைக்காதீர்கள் நண்பர்களே உங்கள் கடவுள் என்ற கருத்து உருவான காலந்தொட்டே அதை நிறுத்து என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. முற்காலத்தில் மன்னர்கள் மதகுருமார் பிடியில் அகப்பட்டதனால் அறிவுக்கருத்துக்களை வெளியிட்டு மனித சிந்தனைக்கு களம் திறந்த அறிஞர்களை அழித்தார்கள். ஆனால் உண்மைகள் நீண்டநாள் உறங்காது என்பதை பகுத்தறிவின் வளர்ச்சியும் பார்ப்பானின் வீழ்ச்சியும் பறைசாற்றுகின்றன. ஆதியிலே மனிதன் ஆடையின்றி இலைகள் குழைகள் அணிந்து, பச்சை இறைச்சி உண்டு,மரங்கள் குகைகளிலே மொழிகள் எதுவும் தெரியாமல் விலங்குகள் போலே தாவித்திரிந்த அவனுக்கு, எல்லாம் வல்லதாய் எங்கும் நிறைந்த இறைவன் இருக்கின்றான் அவனை அடைவதே வாழ்வின் பேரின்பம் என்றும் இறைவனுக்கு மலர் தூவி பால், பழம், பொங்கல் படைத்து கோயில் ஒன்று கட்டி (இந்த ஆகம விதிமுறைகள் எப்பொழுது தோன்றின?) வழிபடவேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே கடவுள் என்ற எண்ணம் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதே திண்ணம். கடவுளின் வருகை காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்த மனிதன் கொடிய விலங்குகளோடு போராடினான், அவற்றைக்கண்டு அஞ்சி நடுங்கினான், சிறிய ஒலிகள் அசைவுகளைக் கண்டு ஒடி ஒழிந்தான், இயற்கையின் கொடுமைகளைக்கண்டு பயந்து நடுங்கினான், இடி மின்னல், காட்டுத்தீ, புயல், மழை போன்றவற்றின் இடைவிடாத தாக்கத்தினால் பெரிதும் அச்சமடைந்தான். இவை யாவும் மனிதனிலும் சக்திவாய்ந்தவர்களால் மறைந்து நின்று செய்யப்படுகிறது என்று எண்ணி அவற்றை வணங்கினான். ஈற்றில் மனிதனது அச்சமே கடவுள் கொள்கையின் மூலப்பொருள் ஆயிற்று. இன்னும் கூட மனிதர்கள் தனக்கு விருப்பமில்லாத செயல்கள் நடந்துவிடும் அல்லது தனது விருப்புக்கள் நிறைவேறாது போய்விடும் என்ற பயம் ஏற்படும் போதுதான் கடவுள் என்று நாடுகிறார்கள். ஆகவே கடவுள் கொள்கையானது அச்சம் காரணமாகவும் அறியாமையினாலும் வளரலாயிற்று. காலம் செல்லச்செல்ல நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் கடவுள்களும் வளர்ச்சியடைந்தன. மனிதன் தன்னுடைய உருவத்திற்கு ஒப்பாக கடவுளைப் படைத்தான். தன்னுடைய கலாச்சாரம் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல் விதிமுறைகளை வரையறை செய்தான். இவ்வாறு தோற்றம் பெற்ற கடவுட்கொள்கையானது மத பூதமாய் வளர்ச்சி பெற்று சமூகரீரியான பாகுபாடுகளை ஏற்படுத்தி மக்களைப்பிளவுபடுத்தி கொலை, கொள்ளை என குற்றச்செயல்களின் உந்து சக்தியாய் விளங்குகிறது. கடவுள் என்பது பொருளற்ற கற்பனை, பொய்யர்களின் புகலிடம், வஞ்சகர்களின் வாய் மந்திரம், அறியாமையின் பிறப்பிடம், அச்சத்தின் அடையாளம், பகுத்தறிவுக்குப் பகை, இன்பத்தின் எதிரி, முன்னேற்றத்தின் தடை மொத்தத்தில் வேண்டாத சொல்!
[1:59 AM, 6/28/2015] +91 95516 56551: தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா?
தரையில் நாம் நடந்து செல்லும் போது ஒரு சிறிய நெருப்புத் துண்டை மிதிக்க நேர்ந்தால் அது வலியினை ஏற்படுத்தி பின் கொப்பளங்களையும் போட்டுவிடும். ஆனால் எமது சைவ ஆலயங்களுக்கு சென்று பார்த்தால் தீ மிதிப்பு என்பது வருடா வருடம் நிகழ்கின்ற ஒரு வைபவமாக காணப்படுகின்றது. இது எவ்வாறு சாத்தியம் என்று வினவுகையில் கடுமையான நோன்பு, மனக்கட்டுப்பாடு, இறையன்பு, என்றெல்லாம் சொல்லுகிறார்கள் பக்தர்கள். ஆலயங்களில் தீ மிதிப்பு மட்டுமல்ல இதுபோன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன; உதாரணமாக தீச்சட்டி ஏந்துதல், நெஞ்சு முதுகு வாய் போன்ற உறுப்புக்களில் அலகு அல்லது ஊசி குற்றிக்கொண்டு காவடி எடுத்தல். நெஞ்சை நெகிழ்த்தும் இவ்வாறான வேண்டுதல்களை உடல்வலிமையோடு நிறைவேற்றக் காரணமாய் இருப்பது இறைவனது அருளா? மருளா? அல்லது அறிவியலா? சைவசித்தாந்தம் கூறும் பல ஆன்மீகவாதிகள் கூட இவ்வாறான சடங்குகளுடன் முறன்படுகையில், இன்னும் எம்மில் பலர் இதுபோன்ற மூட பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டெழ விரும்பாமல் இருக்கின்றார்கள். இந்து மதம் வலியுறுத்தும் அன்புடமையும் அதன் கோட்பாடுகளும் ஒரு பொழுதும் இதுபோன்ற சடங்குகளை (வேண்டுதல்) ஆதரித்ததில்லை என்று கூறும் ஆன்மீக வாதிகளால் இறைவனின் அருள் என்றவாதத்தை முன்வைக்க இயலாமையால் மருள் என்ற பதத்தின் மூலம் சிலர் இதை விழக்க முற்படுகின்றார்கள். மருள் என்பத்ற்கு தன்னை மறந்த நிலையினைக் குறிப்பிடுகின்றார்கள். அதாவது சாம்பிராணிப்புகை, ஆடல், பாடல், உடுக்கை ஒலி ஆகியவற்றால் மனம் தன்னை மறந்த ஒரு நிலையை அடைகிறது. இதனையே சிலர் சாமி வந்து ஆடுது (கலை ஆடுதல்) என்றும் அவர்களின் மனதில் உள்ள எண்ணங்களின் பிரதிபலிப்பினாலேயே ஆத்தா, முருகன், காளி என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறு மருள் நிலையில் இருப்பதனால் இவர்கள் அதிகம் வலியை உணராதவர்களாக காணப்படுகிறார்கள் என்பது சைவசித்தாந்த வாதிகளின் கருத்து. தீ மிதித்தல் காவடி எடுத்தல், அலகு குற்றுதல் போன்றவற்றை யாரும் செய்யலாம் இவை அருளும் அல்ல மருளும் அல்ல எல்லாம் அறிவியலை அடிப்படையாக கொண்டவை என்று நிரூபித்திருக்கிறார்கள் பல பகுத்தறிவாளர்கள். சிந்தனை என்பது மனித குலத்திற்கு மட்டும் உரித்தான சொத்து அதன்மூலமாகத்தான் மனிதனால் மூட நம்பிக்கைகளை அழித்து அறிவியலை வளர்க்கமுடியும். அறிவியல் கண்கொண்டு இத்தகைய வேண்டுதல்களையும் சம்பிரதாயங்களை உற்றுநோக்குங்கள். பக்தர்கள் தம் காலாலே நெருப்பை உழக்குகிறார்கள் ஆனால் தம் உள்ளங்கையால் நெருப்பை ஏந்துவதில்லை மாறாக சட்டி ஒன்றினுள் மண்ணை இட்டு பின்பு நெருப்பினை ஏந்துகிறார்கள் உண்மையாகவே அவர்களுக்கு அருள் அல்லது மருள் இருப்பின் அவர்களுக்கு கையிலே சட்டி எதற்கு? அதற்குள் மண் எதற்கு? நேரடியாக கையாலே நெருப்பை ஏந்தலாமே? தொடர்ந்து நெருப்பை கையிலே வைத்திருக்கும் பொழுது கை சூடாகி தீ காயங்கள் ஏற்பட்டுவிடும். ஆனால் தீ மிதிப்பில் இவ்வாறு நடப்பதில்லை ஏனெனில் கால் எந்த இடத்திலும் தொடர்ந்து நிலைத்து நிற்பதில்லை. விரைவாக இடம் மாறிக்கொண்டே இருப்பதால் காலில் சூடேறாமலும் காயங்கள் ஏற்படாமலும் இருக்கின்றது. சமனான உயத்திற்கு பல ஆணிகள் குற்றப்பட்ட காலணியை அணிந்தும் சிலர் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இங்கே பல ஆணிகள் கூர் மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமனான உயரத்தில் அதிக அளவான மேற்பரப்பை பாதங்களுக்கு வழங்குவதால் இவை காலிலே குத்தமாட்டாது என்பது அறிவியலாகும். இதே தத்துவம் தீ மிதிப்பிற்கும் பொருந்தும் ஏனெனில் தனி ஒரு நெருப்புத்துண்டை பாதங்களில் மிதிக்கும் போது காலில் நெருப்பு கடுமையாக சுடுகிறது. ஆனால் அதிக பரப்பளவில் நெருப்புத்துண்டை பரவவிடும் பொழுது காலானது (பாதங்கள்) எந்த ஒரு நெருப்புத்துண்டையும் ஆழமாக அழுத்துவதில்லை இதனால் காலிற்கும் நெருப்புத்துண்டிற்கும் இடையிலான தொடுகை நலிவாகவே இருக்கும். மேலும் தீ மிதிப்பிற்கு முன்பு விறகுக்கட்டைகள் வெந்து தணலாகமாறும் வரை எரிப்பார்கள் அதன் பின்பு அடித்து நொறுக்கி ஒரே மட்டப்படுத்துவார்கள் (மேடு பள்ளம் இல்லாமல் சமப்படுத்துதல்) இறுதியாக விசிறுவதன் மூலமாக நெருப்பின் மீதுள்ள நீற்றினை (சாம்பலை) அகற்றுவார்கள். ஏனெனில் சாம்பல் இருப்பின் அது காலில் ஒட்டிக்கொண்டு அது காலுக்கு அதிக சூட்டினை வழங்கும் என்பதாலாகும். Source: http://viduthalai.periyar.org.in/20100307/news07.html இப்படியெல்லாம் பேச்சளவிலே சொல்லலாம் ஆனால் இதை செய்துகாட்ட முடியுமா என் நீங்கள் கேட்கமுடியும். ஆம் பெரியார் பகுத்தறிவுப்பாசறையில் இருந்து வந்த தோழர்கள் இவற்றை மக்களுக்கு செய்துகாட்டி மூடப்பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். மற்றும் ஒரு பதிவில் அலகு குற்றுதல் தொடர்பாக விரிவாக எழுதுகிறேன்.
[2:10 AM, 6/28/2015] +91 95516 56551: என்னம்மா யோசிக்கிறாய்ங்க !
மெதடிஸ்ட் ப்ராட்டஸ்டாண்ட் சர்ச்சுக்கு போக மாட்டார்கள்
ப்ராட்டஸ்டாண்ட் மெதடிஸ்ட் (பெந்தகோஷ்) சர்ச்சுக்கு போக மாட்டாங்க
இவர்கள் இருவரும் மாதா கோவிலுக்கு போக மாட்டார்கள்
அப்பறம்,
சியா முஸ்லிம் சன்னி முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
சன்னி முஸ்லிம் சியா முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்
இவர்கள் வகாபிகளாக இருந்தால் தர்காவுக்கு போக மாட்டார்கள்
ஆனால் 10000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் மதத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ( கணக்கு தப்பு 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பாலம் கட்டப்பட்டது) ஹிந்து கோவில் எதுக்கு வேண்டுமானாலும் போகலாம். தடையே இல்லை
நன்றாக சிந்தியுங்கள், எது உண்மையான மதம் ? படிக்க ஞாயமான கேள்வி போல் இருந்தாலும், இதிலிருக்கும் இந்துத்துவ விளம்பரம் சகிக்க முடிகிறதா ? அல்லது இவர்கள் சொல்வது உண்மைதானா ?
வடகலை வைணவர், தென்கலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
தென்கலை வைணவர், வடகலை பெருமாள் கோவிலுக்கு போகமாட்டார்
இவ்விருவைணவரும் சைவர்களின் சிவன் கோவிலுக்கு போகமாட்டார்கள்
இம்மூவகையிலும் உயர்சாதியினராக இருப்பவர் நாட்டார் (கிராம) கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்
நாட்டார் கோவில்களில் வன்னியர், தேவர், கவுண்டர் கட்டிய கோவில்களுக்கு வேறு சாதியினர் போகமுடியாது
கண்ட தேவி கோவில் தேர் இழுப்பதற்கு தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பெரியாருக்கு முன்பு மேலே சுட்டிய எந்த கோவிலுக்குள்ளும் 'இந்து' தலித் நுழைவுக்கு அனுமதி இருந்தது இல்லை. இப்போதும் பரவலாக சாதியின் கீழ் உள்ள கோவில்களுக்கு இவர்களால் செல்லவே முடியாது
1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்த புத்த மதம் முற்றிலும் அழிக்கப்பட்டது, பரவலாக இருந்த ஜைன மதமும் மார்வாடிகளிடம் மீட்கப்படாத அடகில் மூழ்கடிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் தற்கால கோவிலுக்குள் தமிழ் பாடும் உரிமைக்கே நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கிவரும் வேலையிலும், ஆறுமுக சாமி போன்ற முதியவர் சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவேன் என்று முனைந்ததற்கு ரவுடிகளின் துணையுடன் மற்றும் ரவிடியாக மாறி தாக்கப்பட்டதெல்லாம் வசதியாக மறைக்கப்பட்டு இந்து மதம் ஒன்றாம், கோவில் என்பதில் எவரும் செல்ல எந்த தடையுமின்றி சென்று வருகிறார்களாம் ?
******
எல்லா மதக் குப்பைகளும் ஒன்று தான், இதில் எம்மதத்துக் குப்பையில் துர்நாற்றம் மிகுதியாக அல்லது மற்றவற்றைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் புனித குப்பை என்று சொல்வது போன்றதே.
[2:19 AM, 6/28/2015] +91 95516 56551: சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?
[
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:
புரதச்சத்து
சுண்ணாம்புச் சத்து
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
சோடியம்
இரும்புச் சத்து
விட்டமின் ஏ
தையாமின்
ரிபோபிளேவின்
நிக்கோடினிக் அமிலம்
ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயாளிகளுக்கு எதற்காக நல்லது?
சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 - 110 மி.லி வரை இருக்கலாம்.
நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும்.
அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.
அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது.
தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு.
[2:22 AM, 6/28/2015] +91 95516 56551: இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள்
[
சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே ஏராளம்.
வாரத்தில் இருமுறை மாமிசம் சாப்பிட்டால் பரவாயில்லை, வாரத்தில் அனைத்து நாட்களிலும் சாப்பிடுபவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது கொஞ்சம் கடினமான விடயம்.
ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை வைத்து நமது ஆரோக்கியம் மேம்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் தவிர்க்க அறிவுறுத்தும் முதல் உணவுகளில் இடம்பெறுவது சிக்கன், மட்டன், மாட்டிறைச்சிகள் தான்.
அவ்வாறு இறைச்சியை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்துவதன் மூலம் உங்கள் உடலில் புதுவித மாற்றங்களை காணலாம்.
1.இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது முதலில் ஏற்படும் மாற்றம் உங்கள் எடை குறைவதுதான். குறைந்தது 3 அல்லது 4 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது.
2. சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடுபவர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
3. தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் அவசியம், எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது, ஆகவே புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. இறைச்சி சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் இந்த உணவை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் சூடு குறையும்.
5. செரிமானப்பிரச்சனைகள் சரியாகும்.
6.இறைச்சியை கைவிட்டால் அதற்கேற்றவாறு சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
[2:28 AM, 6/28/2015] +91 95516 56551: இராமயணம் நடந்த கதையா ?
வடமொழி வேதங்களான நான்கு வேதங்களில் பெரிதாக பேசப்படாத கிருஷ்ணன், மத்வாச்சாரியார் மற்றும் இராமானுஜருக்குப் பிறகே வைணவம் என்னும் விஷ்ணுவை / கிருஷ்ணனை வழிபடும் பிரிவு ஒன்று இருப்பது தெரியவந்தாக இதுவரை தெரிந்த பக்தி இலக்கியம் மற்றும் சமய நூல்களில் இருந்து அறிய கிடைப்பவை. வேதகாலத்திற்கும் பகவத் கீதைக்கும் தொடர்பு இல்லை என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையில் வேதம் பற்றி குறிப்பு இருக்கிறது. வேதங்களில் பகவத் கீதையோ, கிருஷ்ணனோ இல்லை. மேலும் கிருஷ்ணன் ஆரிய கடவுள் இல்லை என்பதற்கு சான்றாக கிருஷ்ணன ஆயர் குலம் சார்ந்த கடவுள் என்கிறார்கள். கிருஷ்ணனின் வண்ணமும், இராமனின் வண்ணமும் கூட கருப்புதான் என்பது அந்த உருவ ஓவியங்களைப் பார்த்தாலே தெரியும்.
சிறப்புற்ற பலவழிபாடுகள் வைதீக மயமாக்கப்பட்ட போது கிருஷ்ணனும் வைதீக மயமாக்கப்பட்டு இருக்க வேண்டும். வேதக்கடவுளாக காட்ட மகாபாரதம் மற்றும் பகவத் கீதையுடன் தொடர்பு படுத்தி இருக்க வேண்டும். கீதையின் முழுப்பகுதியும் கிபி 1500 க்கு பிறகே இறுதி வடிவம் பெற்றதாக அண்மையில் ஒரு நூலில் படித்தேன்.
எனது பார்வையில் இராமயணம் என்பது வைணவ / சைவ மதங்களின் ஒற்றுமைக்காக ஏற்பட்டது என்பது முதன்மையான காரணம். இராமயணத்தில் இலங்கே'ஸ்வரன்' சிவ பக்தனாகவும், இராமரே இராமேஷ்வரத்தில் சிவ பூஜை செய்தவராகவும் காட்டப்பட்டு இருக்கிறது.
கிருஷ்ண அவதாரம் என்று சொல்லப்படும் தசவதாரத்தில் இராமனும் ஒன்று. மற்ற அவதாரங்கள் நடந்ததற்கான சான்றுகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. அவற்றிற்கான புராணங்கள் மட்டுமே இருக்கிறது. பூமி தட்டையானது என்ற கருத்து கொண்டிருந்த போது அவதாரக்கதைகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். மூன்று அடி நிலம் கேட்டு மாபலி சக்ரவர்த்தியிடம் கிருஷ்ணன் நிலத்தை ஒருகாலாலும், வானத்தை ( இல்லாத ஒன்றை எப்படி?)ஒருகாலாலும் 'அளந்ததாகாவும்' மீதம் ஒரு அடி வைக்க இடம் இல்லாது போனதால் மாபலி சக்ரவர்த்தி தலையில் காலை வைத்து மண்ணுக்குள் அமிழ்த்தியதாகவும் அவதாரக் கதை வாமன அவதாரத்தில் செப்புகிறது. உருண்டையான பூமியை ஒரு தட்டையான பாதத்தால் எப்படி அளக்க முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் புராணங்கள் உருவான போது பூமி தட்டையானது என்றும் வானம் கூரையாக இருந்தது என்ற கருத்து இருந்திருக்கலாம் என்று கொள்ள முடிகிறது. கூர்ம அவதாரம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்.
இதுபோன்றே பல அவதாரக் கதைகளும் சுவைபட எழுதி இருந்தாலும் நடப்புக்கு ஒவ்வாதவையாகவே இருக்கிறது. எனவே 8 அவாதாரக்கதைகளைப் போல் தான் இராம அவதாரக் கதையும் அதில் ஒன்று என்று கருத முடிகிறது. தெய்வங்கள் இருக்கிறது என்று நம்புவருக்கு இராமார் வாழ்ந்தார் என்று நம்புவது ஒன்றும் கடினமானது அல்ல. ஆனால் அவதாரங்கள் அனைத்தும் 'லோக ஷேமத்திற்கு' என்று அவற்றிற்கான காரணமாக அதை நம்புவர்கள் சொல்லும் போது, கோவில்களை இடம் மாற்றி வைப்பதாலேயோ, அல்லது பாபர் மசூதி போன்றும், புத்த விஹாரங்களை இடித்தது போன்றும் நம்பிக்கை சார்ந்த இடங்களை இடித்தது பாவச் செயல் அல்ல என்று ஆதிக்கம் நிலைநிறுத்திக் கொண்டதையும் நினைத்தால், மணல் திட்டு என்று அரியப்பட்டத்தை இராமர் பாலம் என்று நம்பினாலும் மக்கள் நலனுக்காக அதனுடன் சுற்றுசூழலின் பாதூகாப்பையும் கவனத்தைக் கொண்டு பொருளாதார மேம்பாட்டுக்கு தேவை என்னும் போது அகற்றிவிட்டால் பெரிதாக கெடுதல் ஒன்றும் வரப் போவதில்லை.
ஆப்கானில் புத்தர் சிலைகளின் தலை பீரங்கிகளுக்கு வீழ்ந்த போது இந்தியாவில் பிறந்தவர் புத்தர் என்பதற்காக இந்தியாவுக்கு கெடுதல் எதுவும் வரவில்லை. அது மதவெறியால் உடைக்கப்பட்டது. ஆனால் இங்கு நாம் ஆக்கபூர்வத்திற்காக ஒரு மணல் திட்டை அகற்றுகிறோம். வைரவேல் திருடு போனபோது திருடர்களை சூரசம்ஹாரம் செய்யாத முருகன், பஞ்சலோக சிலைகள் களவு போனபோது கவலைப்படாத மற்ற தெய்வங்கள், மரகத லிங்கங்கள் கடத்தப்பட்ட போது ருத்தர தாண்டவம் ஆடாத சிவனையும், பரம்பரைகளாக கோவில் சொத்துக்களை தின்றொழிக்கும் கும்பல்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றன.
கருணாநிதி இந்துக்களை இழிவு படுத்துவிட்டார் ? யார் யார் இந்துக்கள் ? நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்துக்கள் இல்லையா ? அவர்கள் தங்கள் குல சாமிகள் ஆடு கோழி கேட்கும் என்று அதை பலி இடுவது நம்பிக்கையில்லையா ? அவர்களின் நம்பிக்கைகளையும், விழாக்களையும் ஒரே ஒரு சட்டத்தில் பாழ்படுத்தி, அவர்களை, அவர்களே கட்டிக் கொண்ட சாமிகளுக்கு முன்னால் வெட்ட முடியாமல்போன ஆடுகளை சுடுகாட்டில் வெட்ட வைத்து அவர்களை மசான (மயான) புத்திரன்களாக ஆக்கியது மட்டும் இழிவு இல்லையா ? இதையெல்லம் செய்வதவர் கருணாநிதி என்னும் நாத்திகரா ? நாட்டார் தெய்வங்களை வழிபடுபவர் இந்துக்கள் இல்லையன்றும், அவர்கள் இந்து தெய்வங்கள் இல்லை என்றும் சொல்ல முடிந்தால் இறை நம்பிக்கை இழிவு படுத்துப்படுவதைப் பற்றிய கூற 'யோக்கிதை' இருக்கிறது கொள்ளலாம். நாட்டார் தெய்வங்கள் சர்கரை பொங்கல் மட்டுமே சாப்பிடும், ஆடுகோழி கேட்காது என்று அந்த சாமிகளே வந்து சொல்லியதா ? கூட்டம் கூட்டி இந்திய இந்துக்களின் ஜனத்தொகைக்கு மட்டும் அவர்களது எண்ணிக்கை வேண்டும், அவர்களது குலதெய்வமும், நம்பிக்கை ஏற்புடையதல்ல என்பது ஆதிக்கம் செலுத்துவது இழிவு படுத்துவது அன்றி வேறு என்ன ?
நம்பிக்கை என்றால் அவரவருக்கு இருப்பது எல்லாமே நம்பிக்கை தான் ஒருவர் மொட்டை அடித்துக் கொள்வார், தரையில் உருளுவார், அலகு காவடிகள் கூட எடுப்பார், இதையெல்லாம் பைத்தியகாரத்தனம் என்று சொன்னால் கருணாநிதி இதிகாச இராமனைப் பற்றி கேள்வி எழுப்பியதில் என்ன தவறு இருக்கிறது ? கருணாநிதி வெறும் வாய்வார்த்தை தானே சொன்னார், பிஜேபி, இந்துபரிவார அமைப்புகளின் ஆதரவுடன் ஜெயலலிதா நாட்டார் தெய்வங்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் பேரிலேயே சட்டம் இயற்றி , காவலர்கள் துணையுடன் ஆடுகோழி பலி இடுபவர்களை ஓட ஓட விரட்டி இழிவு படுத்தினாரே, அது இந்துமதத்தின் மீதான இழிவு இல்லையா ? கருணாநிதியின் முயற்சியினால் தான் ஓடாத திருவாரூர் தேர் ஓடியதாக சொல்கிறார்கள். கோவில்களை தேவதாசிகள் என பெண்களை 'வைத்திருந்து' கோவிலையும் தெய்வத்தையும் பெண்களையும் இழிவு படுத்தியதெல்லாம் கருணாநிதி போன்ற நாத்திகர்களே துடைத்தொழித்தனர்.
ஒரு மக்கள் நல திட்டத்தை நம்பிக்கை என்ற பெயரால் கெடுக்கும் போது, அந்த நம்பிக்கையை குறித்து கேள்வி எழுப்புவது மட்டும் என்ன தவறோ ?2:51
[9:05 AM, 6/28/2015] +91 95516 56551: காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் ! நாமே திடீர் நகருக்கு நேரில் சென்று படம் குறித்த படைப்பாளிகள், மற்றும் ரசிகர்களின் கருத்தை சொல்லி அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்வோம் என முடிவு செய்தோம்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள்
சென்னை-அண்ணாசாலையை ஒட்டிய சைதாப்பேட்டை மறைமறையடிகள் பாலம் அருகே கீழே உள்ள திடீர் நகர், கோதாமேடு-அண்ணாநகர் பகுதிகளுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்றோம்.
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள். மூன்றடி இடைவெளிச்சந்தில் இருபுறமும் தகரக் கொட்டகைகள்.
சிரிப்பு, கும்மாளம், அவலம், வெறுமை, சுறுசுறுப்பு, சோம்பிக்கிடத்தல் என விதவிதமான உணர்ச்சிகளுடன் தென்பட்ட சிறுவர் பெரியவர் அனைவரையும் சந்தித்தோம்.
“காக்கா முட்டை படம் சூட்டிங் நடந்த இடம் இதுதானே”
“ஆமாம்” என்று சிரித்தனர்.
“காக்காமுட்டை படம் பார்த்தீர்களா”
“டிவியிலே பார்த்தோம் பாட்டு, ட்ரெயிலர் எல்லாம்..” என்றனர். சிலர் டி.வி.டியிலும் ஓரிருவர் தியேட்டரிலும் பார்த்தாக சொன்னார்கள். பெரும்பான்மையினர் பார்க்கவில்லை. சொல்லப்போனால் அப்படம் திரையரங்குகளில் வந்ததே தெரியாது.
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…“, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..” என்று காக்கா முட்டையில் கவிஞர் நா. முத்துக்குமார் உருவாக்கியிருக்கும் அற்புதமான மகிழ்ச்சி, சந்தோஷம், ஜாலி, நிம்மதி குறித்து மக்களிடம் கேட்டோம்.
அருகில் வந்த ஒருவர் “அவனுங்க, காக்காமுட்டை, பல்லிமுட்டைனு படம் காம்ச்சி, அவார்டு வாங்கி மேலேமேலே பூடுவனுங்கோ….நாங்க மட்டும் கூமுட்டையா கூவத்துலேயே இருக்கணும்னு படம் காட்டாறனுங்களா? இங்க எங்களுக்கு இன்னா… நிம்மதிய கண்டானுங்க… அவசரம்னா…. போறத்துக்கு வீட்டுல ஒரு கக்கூஸ் இருக்குதானு பாத்தானுங்களா? பொம்பளைங்க, குழந்தையுங்க, வயித்துவலி பேதி வந்தா, ரோடு வரைக்கும் ஓடணும். அங்கேயும் போனா…க்கியூதான்…அது வரைக்கும் …நீ நில்லுன்னா… அது…நிக்குமா? பெருசுங்கக்கூட காலோடோ…போ…ய்யி..டும். அந்த அசிங்கம் அவனுங்களுக்கு தெரியுமா? …
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…”, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..”
இங்க..2000 பேருக்கு மேல்..கிறோம்…2..கக்கூஸ்தான் (பொதுக் கழிப்பறை – ஆணுக்கு 2, பெண்ணுக்கு 2)…அதுலயும் அங்க தண்ணீ…இல்ல.. டப்பாவுல எடுத்துகினு போனோதான் கழுவ முடியும்…!…இன்னும் ஆயிரம் கப்பு (நாற்றம்)… இருக்குது இங்கே.. ..அதலதான் ..நாங்க வாழ்றோம். இந்த.. வாழ்க்கை அவனுங்களுக்கு சந்தோசமா.. தெரியுதா?” என்று எரிச்சலாகி முறைத்தார்.
அடுத்ததாக கூவம் கரைக்கு அதாவது காக்கா முட்டையின் படி “தாயின் மடி” கரைக்கு நம்மை அழைத்துச் சென்றனர், பகுதி சிறுவர்கள். “பச்சை பசுங்காடு” என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் “பச்சை பீக் காடு” கண்டு பீதியில் உறைந்தோம்! அதன் நடுவே, சிறுவர்கள் ஒரு கற்பாறையில் கிரிக்கெட் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தனர். அனுபவம் இல்லாததால், கவனமாக சென்றும் பீயில் விழுந்து எழுந்த பிறகுதான் வினவு செய்தியாளர் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது!
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”
“சார்.. இங்க எதுக்கு வர்றீங்க …?” என்றனர், அருகில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.
“இங்கு எப்படி விளையாடுவீர்கள்? பந்து ஆய் மீது விழுந்தால் என்ன செய்வீர்கள்”
‘அதெல்லாம் ஒரு மேட்ரா…’ என்பது போல் நம்மைப் பார்த்தார்கள்!
“டொக் (மெதுவாக அடிப்பது அல்லது கட்டை போடுவது) அடிச்சிதான் இங்க விளையாடணும். தூக்கி அடிக்கிறவன தொறத்திடுவோம்” என்றனர். ஆக இங்கே சிக்சரோ இல்லை ஃபோருக்கோ வழியில்லை. கிரிக்கெட்டிலே கூட திடீர் நகர சிறுவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது என்ற போது அங்காடித் தெரு இயக்குநரின் அறிவு குறித்து நாம் கரிசல் மண் சென்றுதான் அழ வேண்டும்.
அரசுக்கு சொந்தமான டோபி கானா (வண்ணார் துறை – சலவைத் தொழிலாளர் பகுதி) நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சுதாகர் என்ற மாணவரிடம்…
“ஆமா நீ ஏன் செருப்பு போட மாட்டேங்குற?
“அத போட்டா வழுக்குதுண்ணே?”
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல”
“நடந்தாலே வழுக்குதா?”
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”
“சரி வீட்டுல டாய்லெட் இல்லயா?”
“வீட்டுல குளிக்க மட்டுந்தா முடியும்”
“நைட்ல டாய்லெட் வந்துச்சுன்னா என்ன பண்ணுவ?
“கரைக்கி(கூவம்) போயிட்டு இங்க வந்து கழிவிக்குவேன்”.
திடீர்நகர சிறுவர்கள் செருப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது பற்றி காக்காமுட்டை படம் உருவாக்கிய குறியீடு, படிமம், கவித்துவம் குறித்து கதையளந்த அந்த நல்லவர்கள் எங்கே?
வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மு என்பவர், “சொன்னா.. அசிங்கம்..சார்…எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…” என்று மீண்டும்… கோபத்தோடு ஏதோ.. சொல்ல வந்தவரை அருகிலிருந்த பிற பெண்கள் இழுத்து வாயடைத்தனர்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?”
அத்தெருவில் சாப்பாட்டுக்கடை நடத்தும் கற்பகம் என்பவர், “இந்த சினிமாக்காரனுங்க எங்களப்பத்தி இப்படி காமிகிறதுக்கு புதுசு இல்ல! ஆனா இந்த சாக்கடையிலக் கூட எங்கள வாழவுடாம பலபேரு, இந்த எடத்த எப்படி புடிங்கிறதுனு குறியா கீறானுங்க. சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல” என்றார், குரல் உடைந்து.
பக்கத்திலிருந்த கமலக்கண்ணன் என்பவரிடம், “உங்களை கொசுக்கள் கடித்தாலும் காக்கா முட்டையில் வரும் பாடல் போல ‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?” என்று கேட்டோம்.
“….சார்…நல்லா வாய்ல்ல வருது சார்…பேமானிங்க, சினிமாக்காரனுங்கள இங்க ஒரேஒரு நாளைக்கு வந்து படுக்க சொல்லுங்க சார்…! 3 அடிஅகலம் உள்ள சாக்கடைதான் எங்களுக்கு தெருவு! அதுமேல சிமெண்டு ஸ்லாப் போட்டு நடக்கிறோம், சாப்புடுறோம். தூங்றோம். இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!” என்றார்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…”
பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த சொளமியா என்பவர். “கொசுக்கடி மட்டுமில்ல, குடிக்க தண்ணீ, குழாயில ராத்திரி 12 மணிக்கு மேலதான் வரும்! பாதி ராத்திரி 1 மணி, 2மணிக்கு குடிக்கிற தண்ணிய புடிச்சுட்டு, அப்பிடியே குளிச்சிருவோம். அந்நேரத்திலதான் யார் பாப்பாங்களோன்ற பயம் இல்லாம குளிக்க முடியும்! பிறகுதான் தூங்கப் போவோம்.
எல்லார் தலைமாட்டிலும் ஒரு கொசு வத்திய கொளுத்தனாதான் தூங்க முடியும். அதனால பகல்லானா… குழந்தைங்க விடாம இருமுதுங்க… டாக்டர் கிட்டப்போனா கொசுவத்தி வைக்கக் கூடாதுனு சொல்றாரு.. .எங்க வேதனைய… யார்..கேக்றாங்க..” என்றார்.
திடீர்நகர் வீடுகளில் கழிப்பறை இல்லை. குளிக்கவே முடியாது. ஏனெனில் வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் பெண்கள் நள்ளிரவில் ஊர் அடங்கியதும் தெருக்கோடிகளில் சென்று குளிக்கிறார்கள். குளியல் என்றால் ஏற்படும் ஒரு ரம்மியம், மணம், மல்லிகை, ஸ்கந்தம், பாத்ரூம் பாடகர்கள் போன்ற குறியீடுகளில் வாழ்பவர்கள் தங்களது தெருக்களில் நள்ளிரவில் குளித்தால் காக்கா முட்டை குறித்த படிமங்கள் டமாலென உடைந்து விடும், கவனம்!
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“லின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”
திடீர் நகர் சிறுவர்களின் ஆர்வம், கனவு, பணப் புழக்கம், நவீன நுகர் பொருட்கள் பற்றிய அறிவு என்ன?
நாங்கள் சென்ற நேரம் கோலிக்குண்டு சீசன். கோதாமேடு, அதை ஒட்டியுள்ள ஹவுசிங் போர்டு தான் இவர்களின் ஆடுகளம். காலை 7 மணிக்கு ஆட ஆரம்பித்த சிறுவர்கள் 1 மணி வரையில் பல்வேறு கூட்டமாகப் பிரிந்து பிரிந்து விளையாடினர்.
மாத்திரை (விஷ்ணு) வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு வந்து மீண்டும் கெத்தா விளையாட ஆரம்பித்தான். அப்போது அவனுடைய நண்பன் சொரி(சந்தோஷ்) “டேய் இவன யாரும் சேத்துக்க வேணாண்டா! இவனுக்க சாப்ட கொடுத்த துட்ட வெச்சி கோலிக்குண்டு வாங்கியாந்துட்டான்” செல்வம் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்தார்.
சஞ்சீவ், முட்டை பஜ்ஜி (ரகுமான்), கலீல், ஷாஜஹான், கவுதம், கமலேஷ் என எல்லாரும் கோலிக்குண்டு விளையாடி ஜெயிப்பதில் மூழ்கியிருந்தனர். இவர்கள் ஒரே அணியாக மட்டுமே விளையாடவில்லை. சிறிது நேரம் ஒரு குழு, பிறகு வேறு ஒரு கூட்டம் என மாறி மாறிக்கொண்டே இருந்தனர்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா
ஒரு குண்டு ஒரு ரூபாய் என ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 ரூபாய் மதிக்கத்தக்க குண்டுகள் இருந்தன. புதிதாக ஒரு கிரவுண்ட் இருந்தாலும் அங்கே வாலிபர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொள்வதாலும், வெயிலாக இருப்பதாலும், வெறும் மணலாக மட்டுமே இருப்பதாலும் சிறுவர்கள் வீட்டிற்கு அருகிலேயே விளையாடுகின்றனர்.
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா, 15 ரூபாய் சம்பாதிக்க திண்டாடுவார்களா என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம்.
சுதாகரிடம்…
“ரயில்வே ட்ராக் பக்கமெல்லாம் போவீங்களா?
”இல்லண்ணே அங்க போனா பெரியவங்க தொரத்திருவாங்க”…
காக்கா முட்டை காட்டிய படங்கள்
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“பள்ளிக்கூடத்துல தெனமும் தீனி எதாவது வாங்கி சாப்புடுவியா?”
“சிப்ஸ், குர்குரே, பிங்கோ எல்லாம் சாப்புடுவேன்”
“சரி யாரு ஒனக்கு இவ்ளோ காசு கொடுப்பா?”
“எங்கம்மா தான் கொடுப்பாங்க, தெனமும் 5 ரூவா இல்ல 10 ரூவா கொடுப்பாங்க,
டீச்சர் கல்லூரியில் உள்ள அரசு மாடல் மேல்நிலைப்பள்ளியில் 11-வது படிக்கும் செல்வத்திடம்..
“என்னடா தம்பி கோலிக்குண்டு வெளையாடலியா?”
“இல்லண்ணா நாங்கெல்லாம் WWF-தான் பாப்போம்”
“அப்படியா யாரப் புடிக்கும்?”
“இப்பக்கி ஜான் சினா தான்”
“சரி வேற யாரையெல்லாம் தெரியும்?”
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன்.”
“காலின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”
“ஏண்டா தம்பி பத்தாவது படிச்சவுடனே டிப்ளமோ படிக்க போயிருக்கலாம்ல?”
“இல்லண்ணா, ஸ்கூல்ல படிச்சா ஃபிரண்ட்ஸ்களோட ஜாலியா பேசிக்கினு வெளையாடிக்கினு இருக்கலாம், காலேஜ்-னா செரமம் அதான் +1 சேந்துட்டேன்”
“ஒனக்கு நெறையா காசு கெடச்சா என்னடா தம்பி சாப்டுவ?”
“நெறையா காசு இருந்தா பீஃப் ரைஸ் தான்னே சாப்பிடுவேன்”
“பீசாவெல்லாம் சாப்பிடுவியா?”
“எங்கப்பாகிட்ட சொன்னா, ஆட்டோ ஓட்டி முடிச்சிட்டு வர்றப்ப வாங்கிக்கினு வருவாரு, பேக்கரில கூட 30 ரூவாக்கி கெடைக்குது. மெக்டொனால்ட்ஸ்-ல கூட 90 ருப்பீஸ்-கு போட்ருக்காங்கன்னா”
மற்றும் இங்கிருக்கும் பல சிறுவர்களுக்கு வாட்ஸ் அப் உட்பட அனைத்தும் பரிச்சயம். செல்பேசி இல்லாத சிறுவர்கள் கூட தங்களுக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு இருப்பதை சொல்லி பெயர் கொடுத்தார்கள்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு”
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சுதாகரிடம்…
“தினமும் பள்ளிக்கூடத்துக்கு போறப்ப குளிப்பியா?
“குளிப்பேன்”,
“எங்கடா தம்பி குளிப்ப?“
“வீட்ல தான் குளிப்பேன்!”
“கூவத்துல குளிக்க மாட்டியா?”
“சின்னப்புள்ளயா இருக்கப்ப தான் குளிச்சிருக்கேன், அப்பல்லாம் தண்ணி நல்லா இருக்கும், இப்பல்லாம் வீட்ல மட்டும் தான் குளிக்கிறோம்”
செல்வத்திடம்…
“ஒனக்கு ரொம்ப நாளா எதாவது ஆசையிருக்குதா?”
“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல, லீவு நாள்ல வாட்டர் கேன் சப்ளை பண்ணுவேன், கெடைக்கிற வச்சு சட்டையெல்லாம் எடுத்துக்குவேன், மீதி இருந்தா அம்மா கிட்ட கொடுத்துருவேன்”
“சரி தினமும் கூவத்துல குளிக்கிறியா?”
“என்னாண்ணா? அங்க குளிக்கிற மாதிரியா இருக்கு? ஒரே சேறா இருக்கு, நான் சின்ன புள்ளயா இருந்தப்ப குளிச்சிருக்கேன், அப்பொல்லாம் தண்ணி க்ளியரா இருக்கும், இப்பல்லாம் சாக்கடை தண்ணியா தொறந்து வுடுறாங்க, ஏ.பி.டி-லேர்ந்து தெனமும் அவ்ளோ சாக்கட தண்ணியா கொட்டுறாய்ங்க”
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!”
“அப்ப ஆத்துகெல்லாம் எப்ப தான் போவீங்க?”
“காலைல கால் கழுவ மட்டும் தான்னா போவோம், அதுவும் வூட்ல கக்கூஸ் இருந்தா இன்னாத்துக்கு போறோம்.”
“சார்… இங்க.. வாங்க” என்றார் கமலக்கண்ணன், “பல நாள் சூட்டிங் எடுத்து எங்க பொழப்ப கெடுத்தாங்க சார்… எங்க வீட்டிலேயே எங்கள நிம்மதியா இருக்க விடாம…. அடிக்கடி வெளிய வராதீங்க.. வீட்டுல டிவி சவுண்டு கொஞ்சம் கொறைங்க… அப்படினு அவனுங்க சொல்லறது எல்லாம் கேட்டோம். இப்ப அந்த சினிமாவிலயே எங்களையே நக்கல் பன்றானுங்களா” என்றார் எரிச்சலாக.
ஆறுமுகம் என்பவர் “கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு… அவங்க குழந்தைக்குட்டிங்க இப்ப அநாதையா இருக்குது சார்” என்றார் விரக்தியுடன். கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் பல இணைய பிரபலங்கள் இந்த வரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
எங்கள் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த விக்னேஷ் என்ற இளைஞர், “அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன். சினிமாக்காரனுங்க எல்லாம் ஜோட்டா (பிராடு) வேலை பண்றவங்க” என்றார்.
அங்கு கும்பலாக இருந்த பெண்களிடம் பேசினோம், “மழைக்காலம் வந்தா இங்க எப்படி? குழந்தைகளோடு நீங்களும் சந்தோசத்தில் மிதப்பீங்களாமே?
“….அப்படியா….மழைவந்தா நீங்க இங்க வாங்க. எங்கக்கூட சேர்ந்து வெள்ளாடுவிங்க….” என்று சிரித்தனர்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும்”
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும். காய்ச்சல், பேதி, நாத்தம், வேலையில்ல, சோறு இல்லனு…. செத்து பொழைப்போம்… இருந்தாலும் மழை வேணுமில்லனு… மனசு சொல்லும். குழந்தைகளை தேத்திகினு.. இருப்போம்” என்று வலியோடு பேசினர்.
மழையை ரசித்து சிறுவர்கள் ஆட்டம் போடுவதாக காக்கா முட்டை படத்தில் காட்டப்பட்டது பற்றி செல்வம் என்ற சிறுவனிடம்
“மழையெல்லாம் வந்தா என்னடா தம்பி செய்வீங்க”
“அண்ணா, மழை பெஞ்சுச்சுனா வீட்டுல ஒழுவுற எடத்துலெல்லாம் பானைய வெக்கணும், அப்புறமா ரெண்டு மூனு நாளு கழிச்சி கொசு கடி தாங்காது, வெள்ளம் கூடுனா உடனே பள்ளிக்கூடத்தண்ட போயிருவோம். தண்ணி வடிஞ்சப்புறம் வருவோம்”
நாம் பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் பலர் சூழ்ந்து கொண்டனர். காக்காமுட்டை படத்தில் வரும் டாஸ்மாக் கடைக்காக தன்னுடைய டீக்கடையை தற்காலிகமாகக் கொடுத்தவர், கொதிப்புடன், “சூட்டிங் எடுத்துட்டு அப்பால, பேசுனது மாதிரி பணம் கொடுக்காம ஓடுன திருட்டுபசங்க சார் அவனுங்க… இந்தப்படம் தியேட்டருக்கு இல்ல… சின்ன பட்ஜெட்டு.. நீங்களெல்லாம் உதவி பண்ணனும்னு…. பொய் சொன்னாங்க அவனுங்க. பிச்சைக்கார பசங்க! இப்ப அவனுங்கள வரச்சொல்லுங்க. 100 பொம்பளங்கள கூப்பிட்டு தொடப்பக்கட்டையாலேயே அடிப்போம்! அவனுங்க போலீசு ஸ்டேசன் இல்ல எங்கவேனாலும் போய் ரிப்போட் பண்ணட்டும். டூபாக்கூர் பசங்க… ” என்றார்.
காக்கா முட்டை காட்டிய படங்கள்
காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள்.
இப்படி பலபேர், காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள். “துணி காயப்போடும் சீனுக்காக, பலமுறை பசங்களை ஓட்டுமேல ஏத்தினாங்க, எங்க வீட்டு சிமெண்ட் ஓடெல்லாம் போச்சி. அத ரிப்பேரு பண்ண பணம் தரேனு, கடைசியிலே ஏமாத்திட்டு போய்ட்டாங்க…” என்றார் ஒருவர்.
மேலும் சூட்டிங்க்குகாக தன்னுடைய காயலாங் கடையைக் கொடுத்தவர், தடுப்பு கட்டி பாத்ரூம் தந்தவர், அதில் நடித்த அப்பகுதி லட்சுமி பாட்டி… இப்படி பலர் காக்காமுட்டை சினிமா கும்பல் தருவதாக சொன்ன சில நூறு ரூபாய்களைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடிய கதையை சொன்னார்கள். ஆனல் காக்காய் முட்டை உலகமெங்கும் வசூலித்த தொகை பதினைந்து கோடி என்கிறார்கள்.
இப்படிப்பட்ட சினிமா படைப்பாளிகள்தான் காக்கமுட்டைத் திரைப்படத்தில் வரும் திடீர் நகர் மக்கள், தமது பகுதி சிறுவர்களை அடித்த பீட்சா முதலாளியை எதிர்த்து போராடுவதற்கு பணம் எதிர்பார்த்தார்கள் என்று காட்டுகிறார்கள். தங்கள் சொந்தப் பிரச்சினைக்குக்கூட, பேரணி, போராட்டம் என்று அவர்கள் தெருவுக்கு வருவது சாராயம், பிரியாணி, பணத்திற்குதான் என்று பார்வையாளர்களுக்கு குறிப்பால் புரிய வைத்து உலக சினிமா, ஈரானிய சினிமா என்று ஏங்க வைத்தார்கள்.
திடீர் நகர் மக்களிடம் இதைப்பற்றிக் கேட்டதும்,
காக்கா முட்டை காட்டிய படங்கள்
அவன்ங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?
“எங்க பசங்கள எந்த கஸ்மாலமோ அடிச்சதுக்கு, ஞாயம் கேக்க நாங்க காசு கேட்டோமுனு எந்த பாடு சொன்னான்? அவன இங்க இத்துணு வா, கீறி டிக்கிய பொளந்து பீசாக்குறேன். ஏன் சார், எங்க பசங்கள காப்பாத்தக்கூட நாங்க துட்டு கேப்பமா? இதெல்லாம் நிஜமென்னு நம்பிக்கினு உன்ன மாறி பட்ச்சவங்க வந்து கேப்பீங்களா? இதுவே அந்த சினிமா பாடு வந்து சொன்னான்னா கதை வேற! இதுக்கு மேல கேக்காதா, வாயில வந்துற போது”
“சினிமாக்காரனுங்கன்னா எங்கள எது ஒன்னாலும் சொல்வான்களா? அவனங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?…. கண்டத சினிமான்னு காம்ச்சி எங்கள பணம் புடுங்குவோம்னு காட்டுவானுங்களா”, என்று கொதித்தனர்.
இனி என்ன? இந்த வினவு கட்டுரை பிரபலமாகி, காக்கா முட்டை படப்பிடிப்புக்குழு, தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறன், பெரிய தயாரிப்பாளர் முர்டோச் (ஃபாக்ஸ் ஸ்டூடியோ), 60 மார்க் ஆனந்த விகடன் அனைவரும் திடீர் நகர் சென்று இஸ்திரி பெட்டி, மூன்று சக்கர சைக்கிள்,
வேட்டி சட்டை, சேலை கொடுக்கும் விழாவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அப்படி ஏதும் திட்டம் அறிவிக்கப்பட்டால் காக்கா முட்டையின் கவித்துவத்தை அம்மக்களுக்கு காட்சிப்படுத்துவோம். மீதியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
– வினவு செய்தியாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக